(க.பிரசன்னா)
பாடசாலை நூலகங்களுக்குப் பொருத்தமான நூல்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், அந்நூல்களிற்கு நூலக அனுமதி பத்திரங்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும் இதற்காக சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதி அச்சிடப்பட்ட நூல்கள், கையெழுத்து பிரதிகளை ஏற்றுக்கொள்வதற்கு கல்வி நூல் வெளியீட்டு ஆலோசனைச் சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மொழி மற்றும் இலக்கியம், மதம், சிறுவர் கதைகள், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பவியல், தகவல் தொழில்நுட்பம், அழகியல், சமூகக்கல்வி, கல்விசார் பெறுமதிமிக்க ஏனைய படைப்புகள், மொழி பெயர்க்கப்பட்ட படைப்புகள் ஆகிய துறைகளின் கீழ் நூல்கள், கையெழுத்துப் பிரதிகள் கோரப்பட்டுள்ளன.
ஏற்கனவே அனுமதிப் பத்திரம் பெற்றுள்ள நூல்களிற்கு அனுமதிப் பத்திரம் செல்லுபடியாகும் காலப்பகுதியானது, அது வழங்கப்பட்ட திகதியிலிருந்து 5 ஆண்டுகள் நிறைவுபெறும் திகதி வரை மட்டுமே ஆகும். அதன் பிரகாரம் இதுவரையில் பெற்றுள்ள அனுமதிப் பத்திரங்களை புதுப்பித்துக் கொள்வதற்கும் சந்தர்ப்பத்தினை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை நூலக அனுமதிப் பத்திரங்கள் பெற்றுக்கொள்வதற்கு ஆர்வமுள்ள நூலாசிரியர்கள் மற்றும் நூல் வெளியீட்டாளர்கள் வாரத்தின் திங்கட் கிழமைகளில் கல்வி அமைச்சின் 5 ஆம் மாடியில் அமைந்துள்ள கல்வி நூல் வெளியீட்டு ஆலோசனைச் சபையிடம் உரிய நூல்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகளை சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களுக்கு 0112784839 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக அழைப்பினை ஏற்படுத்த முடியும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM