உயிர்த்த ஞாயிறு தாக்குதலைப் போன்று மீண்டுமொமுறை இடம்பெறாது என நம்புகின்றோம் - பேராயர் 

Published By: Digital Desk 4

16 Dec, 2020 | 11:12 PM
image

(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்டதைப் போன்று எதிர்காலத்தில் அவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறாத பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்கு தற்போதைய அரசாங்கம் மற்றும் ஜனாதிபதியின் தலையீட்டுடன் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என நம்புவதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

2019 உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பிரச்சினைகளை தீர்த்தல் மற்றும் தாக்குதலுக்கு இலக்கான தேவாலயங்களின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து பிரதமரின் பங்கேற்புடன் அலரி மாளிகையில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் நிறைவிலேயே பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பு தொடர்பில் பிரதமர் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது :

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக கடுவபிடிய பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் 24 வீடுகள் திட்டத்தின் பணிகள் இதுவரை நிறைவடைந்த இடத்திலிருந்து மீண்டும் ஆரம்பித்து விரைவில் நிறைவுசெய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அரச பொறியியலாளர் கூட்டுத்தாபனத்திற்கு பிரதமர் இதன்போது அறிவுறுத்தினார்.

மேலும், காணி உரிமை கொண்டுள்ளவர்களுக்காக மேலும் 5 வீடுகள் கடுவபிடிய பிரதேசத்தில் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ளது. தாக்குதலில் பாதிக்கப்பட்டு கொழும்பை அணிமித்த பகுதிகளில் வாடகை வீடுகளில் குடியிருக்கும் 33 குடும்பங்களுக்காக வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் திட்டமிடப்பட்ட வீட்டுத் திட்டத்திலிருந்து 33 வீடுகளை ஒதுக்கித் தருமாறு பிரதமர் இதன்போது கூறினார்.

இம்மக்களுக்கு மேலதிகமாக பதுளை, கண்டி உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள தாக்குதலினால் பாதிக்கப்பட்ட 11 குடும்பங்களுக்காக அந்தந்த பிரதேசங்களில் வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பது தொடர்பில் இதன்போது உடன்பாடு எட்டப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்களுக்காக ஸ்ரீ ஜயவர்தன வைத்தியசாலையினால் பெற்றுக் கொடுக்கப்படும் மருத்துவ வசதிகளை விரிவுபடுத்துவது தொடர்பில் அறிவுறுத்திய பிரதமர், அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் மற்றும் சிகிச்கை அறை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கினார்.

இதற்கு மேலதிகமாக நிதி அமைச்சின் ஒதுக்கீடுகளை கொண்டு தற்போது நிர்மாணப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ள கடுவபிடிய அறநெறி பாடசாலையை 60 மில்லியன் ரூபாய்க்கும் அதிக தொகையை செலவிட்டு நிர்மாணப் பணிகளை நிறைவுசெய்தல், தாக்குதலில் சேதமடைந்த கொச்சிகடை தேவாலயத்தில் ஏற்கனவே திட்டமிட்டபடி கடற்படைக்கு ஒதுக்கீடுகளை மேற்கொண்டு நிர்மாணப் பணிகளை நிறைவுசெய்வதற்கும் பிரதமர் இதன்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

கடந்த அரசாங்கம் கொச்சிகடை தேவாலயத்தை ஒரு புதிய வடிவமைப்பில் நிர்மாணித்து தருவதாக குறிப்பிட்ட போதிலும், அந்தவகையில் நிறைவுசெய்யப்படாமை குறித்த சந்திப்பின் போது வெளிப்படுத்தப்பட்டது. கடந்த அரசாங்கம் பல வாக்குறுதிகளை வழங்கியதை மாத்திரமே செய்தது. ஆனால், நாம் உண்மையாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது குறிப்பிட்டார்.

தாக்குதலினால் பாதிக்கப்பட்டு கடன் தவணைகளை செலுத்த முடியாத, அது குறித்து இதுவரை கோரிக்கைகளை முன்வைத்துள்ள நபர்களுக்கு பெற்றுக் கொடுக்கக்கூடிய கடன் நிவாரணங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தனியார் வங்கிகளுடன் கலந்துரையாடுமாறு பிரதமர், நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவிற்கு அறிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் தாக்குதலுக்கு இலக்கான தேவாலயங்களில் காணப்படும் பிரச்சினைகள் அருட்தந்தை லோரன்ஸ் ராமநாயக்கவினால் இச்சந்திப்பின்போது முன்வைக்கப்பட்டது.

கலந்துரையாடலின் நிறைவில் அங்கு கருத்து தெரிவித்த பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ,

பிரதமருக்கும் அரசாங்கத்திற்கும் தனிப்பட்ட ரீதியில் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுத்து, அவர்களது பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு முயற்சிக்கும் இந்த வேலைத்திட்டத்திற்கு எமக்கு வழங்கிய ஆதரவு தொடர்பில், விசேடமாக இந்த விடயத்தில் தலையீடு செய்து நடவடிக்கை மேற்கொள்ளும் அமைச்சர்களுக்கும், இராஜாங்க அமைச்சர்களுக்கும் நான் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

எமது மக்கள் பாதிக்கப்பட்டமையினாலேயே நாம் இந்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றோம். எதிர்காலத்தில் அவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறாத பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்கு உங்களது அரசாங்கம் மற்றும் ஜனாதிபதியின் தலையீட்டுடன் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என நாம் நம்புகின்றோம். அது குறித்து நாம் பிரதமர் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். இவ்வாறானதொரு சந்திப்பை ஏற்பாடு செய்தமை குறித்தும் பிரதமர், அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன் எனக் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58