(எம்.மனோசித்ரா)
நாட்டில் கொவிட் - 19 தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 34 000 ஐ கடந்துள்ள இதே வேளை 25 000 இற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் நாடளாவிய ரீதியில் 9 மாவட்டங்களில் பொலிஸ் பிரிவுகள் , கிராம சேவகர் பிரிவுகள் மற்றும் தொடர்மாடி குடியிருப்புக்கள் உள்ளிட்ட 60 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இன்று புதன்கிழமை மாலை 7 மணி வரை 326 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய நாட்டில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 34 447 ஆக உயர்வடைந்துள்ளது.
இவர்களில் 25 652 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு , 8638 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதே வேளை 499 நபர்கள் தொற்று அறிகுறிகளுடன் சந்தேகத்தினடிப்படையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
இன்று பதிவான மரணங்கள்
இன்று புதன்கிழமை 3 கொரோனா மரணங்கள் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டன. கொழும்பு – 14 பகுதியை சேர்ந்த 60 வயதான பெண் ஒருவர், கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு 15 பகுதியை சேர்ந்த 85 வயதான ஆண் ஒருவர், வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். கொழும்பு 15 பகுதியை சேர்ந்த 84 வயதான ஆண் ஒருவரும் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். குறித்த மூவரும் கொரோனா தொற்றுடன் ஏற்பட்ட நிமோனியா நிலைமையால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
9 மாவட்டங்களில் 65 பகுதிகள் தனிமைப்படுத்தலில்
நாட்டின் 9 மாவட்டங்களில் பொலிஸ் பிரிவுகள் , தொடர் மாடி குடியிருப்புக்கள் , கிராம சேவகர் பிரிவுகள் உள்ளிட்ட 60 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
அதற்கமைய கொழும்பில் 9 பொலிஸ் பிரிவுகளும் , 8 கிராம சேவகர் பிரிவுகளும் , தொடர் மாடி குடியிருப்பொன்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கம்பஹாவில் 12 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கண்டியில் 4 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அம்பாறையில் பொலிஸ் பிரிவொன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
மாத்தறையில் 5 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. காலியில் 7 , இரத்தினபுரியில் 1 மற்றும் மொனராகலையில் 1 என கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM