(எம்.மனோசித்ரா)
கொழும்பு உயர் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் தீ பரவியமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹண தெரிவித்தார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் 3 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.
தீ பரவியமை தொடர்பில் நிர்வாகப் பிரிவு மற்றும் பாதுகாப்பு பிரிவுகளிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.
மின் பொறியியலாளர் மற்றும் அரச இரசாயன பகுப்பாய்வாளர் ஆகியோர் பரிசோதனைகளை மேற்கொண்டிருந்ததுடன், இன்றும் இரசாயன பகுப்பாய்வாளரினால் பரிசோதனைகள் இடம்பெற்றன.
உயர் நீதிமன்ற கட்டடத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள களஞ்சியசாலையிலேயே குறித்த தீ பரவியது. தீயினால் ஆவணங்களுக்கு சேதம் ஏதுவும் ஏற்படவில்லை என நீதி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM