கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி வருட இறுதி புத்தாண்டு களியாட்ட நிகழ்வை நடாத்திய மட்டக்களப்பிலுள்ள பிரபல சுற்றுலா விடுதியொன்றின் உரிமையாளர் உட்பட நிகழ்வை ஏற்பாடு செய்த தனியார் நிறுவனமொன்றின் 46 உறுப்பினர்கள் அடங்கலாக 47பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கல்லடி பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.அமிர்தாப் தெரிவித்தார்.
தனிமைப்படுத்தல் சட்டத்தை முழுமையாக மீறி நேற்றிரவு(15.12.2020) 7 மணியளவில் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள சுற்றுலா விடுதியொன்றில், மட்டக்களப்பிலுள்ள தனியார் நிறுவனத்தினர் வருட இறுதி களியாட்ட நிகழ்வு நடாத்தப்பட்டபோது, அங்கு சென்ற சுகாதார அதிகாரிகளும் காத்தான்குடி பொலிசாரும் குறித்த விடுதியின் உரிமையாளர் மற்றும் விடுதியில் பணிபுரிவோர் நிகழ்வில் கலந்து கொண்டோரென 47 பேரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு நீதிமன்ற அனுமதியின் பேரிலேயே குறித்த நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM