புதுவருட கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு அனுமதியில்லை

Published By: Vishnu

15 Dec, 2020 | 09:18 AM
image

(செ.தேன்மொழி)

புதுவருட கொண்டாட்டங்களுக்கு இம்முறை சுகாதார பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதிமறுக்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

வைரஸ் பரவல் காரணமாக ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ள  பகுதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. 

இந்நிலையில் நேற்றுடன் நிட்டம்புவ, புலத்சிங்கள, வத்தளை, பேலியகொட மற்றும் கிரிபத்கொட ஆகிய பொலிஸ் பிரிவுகளில் எட்டு கிராமசேவகர் பிரிவுகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் நீண்ட நாட்களாக இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசித்து வருபவர்களை பொறுமையுடன் இன்னும் சில தினங்கள் வீடுகளிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

அதேபோன்று புதிதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவர்களும் பயணக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றுவதுடன், சுகாதார தரப்பினரின் ஆலோசனைக்கமையவும் செயற்பட வேண்டும். இதேவேளை மீண்டும் வைரஸ் கொத்தணிகள் உருவாகுவதற்கும் இடமளிக்க கூடாது.

புதுவருடப்பிறப்பை முன்னிட்டு கடந்த வருடங்களை போன்று இம்முறை கொண்டாட்ட நிகழ்வுகள  நடத்த முடியாது. வைரஸ் பரவல் காரணமாக அனைவரும் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயமாகும். 

தற்போது செயற்பட்டுவரும் நிறுவனங்கள் மற்றும் காரியாலயங்களின் ஊழியர்கள் கைகழுவுதல்,முகக்கவசம் அணிதல் போன்ற வழிமுறைகளை முறையாக கடைப்பிடித்து வந்தாலும் மதிய உணவு வேளையில் அனைவரும் முகக்கவசங்களை அகற்றிவிட்டு ஒன்றாக கூடி உணவு உட்கொள்வதாக தெரியவந்துள்ளது. இந்த செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ளவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22