வவுனியாவில் இன்றையதினம் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், சமூகத்தில் இருந்தும் இருவர் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் புதிய சாளம்பைக்குளம் உப கொத்தணியில் இருந்து மூன்று பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்த கைதி ஒருவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டிருந்தது.
திருகோணமலையை சேர்ந்த குறித்த நபருக்கு கடந்த 12ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கான மாதிரிகள் பெறப்பட்டிருந்தது. இன்றையதினம் பரிசோதனைக்கான முடிவுகள் கிடைக்கப்பெற்றது. அதன்படி அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.
இவற்றைவிட வவுனியா கற்குழியை சேர்ந்த 15 வயதான பாடசாலை மாணவி மற்றும் திருநாவற்குளத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. குறித்த இருவரும் சுகயீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலைக்கு சென்ற நிலையில் எழுமாறாக அவர்களிடம் மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவர்களிற்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இவர்கள் சமூகத்தில் இருந்து அடையாளம் காணப்பட்டமையால் பொதுமக்கள் மத்தியில் அச்சமான சூழல் நிலவி வருகின்றது.
இவற்றைவிட பம்பைமடு தனிமைப்படுத்தல் மையத்தில் உள்ள தெற்கினை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமூகத்தில் இருந்து இருவர் தெரிவு செய்யப்பட்ட நிலையில் வவுனியா தெற்கு வலயத்தை சேர்ந்த நான்கு பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகளை இடை நிறுத்துவதாக வவுனியா தெற்கு வலய கல்விபணிப்பாளர் மு.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் இறம்பைக்கும் மகளீர் மகாவித்தியாலயம், தமிழ் மத்திய மகாவித்தியாலயம், இலங்கை திருச்சபை தமிழ் கலவன் வித்தியாலயம், காமினி மகாவித்தியாலயம் ஆகியன மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.
இதேவேளை கற்குழி மற்றும் திருநாவற்குளம் பகுதிகளில் தொற்று உறுதியானவர்களின் வீடுகளில் பொலிசார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM