(செ.தேன்மொழி)
மட்டக்களப்பு - புணானை கொவிட் சிகிச்சை நிலையத்தில் இலத்திரனியல் உபகரணங்களை கொள்ளையிட்ட சந்தேக நபர்கள் நால்வரையும் எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புணானை கொவிட் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை முடிவடைந்த நிலையில், கடந்த சனிக்கிழமை வீடுகளுக்கு அனுப்பிவைக்கபடவிருந்த நான்கு நபர்கள் சிகிச்சை நிலையத்தின் இலத்திரனியல் உபகரணங்களை கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது கொழும்பு - 2 பகுதியைச் சேர்ந்த மூன்று பேரும்,மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
வைரஸ் தொற்றுக்குள்ளான நபர்களை சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்து வருதல் தொடக்கம் அவர்களுக்கான சிகிச்சை மற்றும் உணவு என அனைத்து வசதிகளையும் அரசாங்கமே செய்து வருகின்றது.
இந்நிலையில் அரச சொத்துக்துக்களை இவ்வாறு கொள்ளையிட்டுவருகின்றமை கவலை அளிக்கின்றது. இதனால் இத்தகைய நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நிலையில் இது போன்ற சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதை அனைவரும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அஜித் ரோஹண கேட்டுக்கொண்டார்.
இதேவேளை,சந்தேக நபர்களை பொலிஸார் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.இதன்போது நீதவான் அவர்களை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM