கொரோனா தொற்றாளர்கள் இருவர் அடையாளம் காணப்பட்ட புதிய சாளம்பைக்குளம் பகுதியில் மேலும் மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் கொழும்பில் இருந்து வவுனியா திரும்பிய தாயும், மகளும் சாளம்பைக் குளத்தில் அமைந்துள்ள அவர்களது வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், அவர்களிற்கான பி.சி.ஆர் பரிசோதனையில் இருவருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த இருவரது இருப்பிடமான வவுனியா புதிய சாளம்பைக்குளம் பகுதி நேற்றுமுன்தினம் காலை முதல் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தொற்று உறுதியான இருவரிடத்திலும் நெருங்கி பழகியவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அதன் முடிவுகளின் பிரகாரம் மேலும் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதிய சாளம்பைக்குளம் பகுதியின் முடக்க நிலை நீடிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பகுதியில் அமைந்துள்ள அல்அக்சா பாடசாலையின் கல்வி செயற்பாடுகள் எதிர்வரும் 16 ஆம் திகதி வரைக்கும் இடைநிறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM