(நா.தனுஜா)
உள்நாட்டு விவசாயிகள் தமது உற்பத்திகளுக்கான சந்தைகளைத் தெரிவுசெய்தல், விற்பனை செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை முறைப்படுத்தி மேலும் இலகுபடுத்தும் நோக்கில் தேசிய விவசாய அபிவிருத்தி அதிகாரசபையினால் 'மேட் இன் ஸ்ரீலங்கா' என்ற புதிய செயற்திட்டமொன்று நாளைய தினம் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படவுள்ளது.
மேற்படி செயற்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நாளைய தினம் கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெறவிருக்கிறது. இதுகுறித்து விளக்கமளிக்கும் வகையில் இன்று திங்கட்கிழமை குறித்த அதிகாரசபையினால் ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச அதில் கலந்துகொண்டு, குறித்த செயற்திட்டம் தொடர்பில் விளக்கமளித்தார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:
உள்நாட்டு விவசாயிகள் தமது உற்பத்திகளை விற்பனை செய்வதற்கான சரியான சந்தையைத் தெரிவுசெய்வதிலும் உற்பத்திகளை அங்கு கொண்டுபோய் சேர்ப்பதிலும் நீண்டகாலமாக சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். அதற்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய விவசாய அபிவிருத்தி அதிகாரசபை 'மேட் இன் ஸ்ரீலங்கா' என்ற முக்கிய செயற்திட்டமொன்றை அறிமுகப்படுத்தத் தீர்மானித்திருக்கிறது.
உள்நாட்டு விவசாயிகள் தமது உற்பத்திகளுக்கான சந்தைகளைத் தெரிவுசெய்தல், விற்பனை செய்தல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் இச்செயற்திட்டத்தின் கீழ் முறைமைப்படுத்தப்படுவதோடு இலகுபடுத்தப்படவுள்ளன. 'மேட் இன் ஸ்ரீலங்கா' செயற்திட்டம் உரிய சுகாதாரப்பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி நாளைய தினம் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படவுள்ளது.
தேசிய விவசாய அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள விவசாயிகள் மற்றும் அவர்களால் உற்பத்தி செய்யப்படும் பயிர்கள் தொடர்பான தகவல்களைத் தற்போது சேகரித்துவருகின்றனர். இந்தத் தகவல்களை அடிப்படையாகக்கொண்டு, உள்நாட்டு உற்பத்தியாளர்களை வாடிக்கையாளர்களுடன் நேரடியாகத் தொடர்புபடுத்தக்கூடிய வகையிலான இணையப்பக்கமொன்று உருவாக்கப்படவுள்ளது.
அதேபோன்று உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் 'மேட் இன் ஸ்ரீலங்கா' செயற்திட்டத்திற்கான கொள்வனவு நிலையங்களை அமைப்பதற்கான இயலுமையுள்ள தனியார் முதலீட்டாளர்கள் தொடர்பிலும் மதிப்பீடுசெய்து வருகின்றோம், எனக் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM