‍‍நைஜரின் தென்கிழக்கு பகுதியில் போகோ ஹராம் நடத்திய தாக்குதலில் 27 பேர் பலி

Published By: Vishnu

14 Dec, 2020 | 11:16 AM
image

நைஜரின் தென் கிழக்கு பகுதியில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் குறைந்தது 27 போரை கொலை செய்ததாக அந் நாட்டு ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.

நைஜரின் டிஃபா பிராந்தியத்தில் உள்ள டூமூர் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆயுதமேந்திய குழு தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதல்களின் விளைவாக சுமார் 800 வீடுகளும் பணியிடங்களும் அழிக்கப்பட்டுள்ளன.

அது மாத்திரமன்றி போகோ ஹராமால் வெள்ளிக்கிழமை டிஃபா பகுதியும் தாக்கப்பட்டது. அதன்போது இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

நைஜீரியாவின் எல்லையில் அமைந்துள்ள டிஃபா பகுதி, 2015 பெப்ரவரி முதல் போகோ ஹராமால் அடிக்கடி தாக்குதலுக்கு முகங்கொடுத்து வருகின்றது.

2009 ஆம் ஆண்டு முதல் போகோ ஹராம் நடத்திய தாக்குதல்களில் நைஜரில் 20,000 க்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர், 2 மில்லியனுக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47