நைஜரின் தென் கிழக்கு பகுதியில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் குறைந்தது 27 போரை கொலை செய்ததாக அந் நாட்டு ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.
நைஜரின் டிஃபா பிராந்தியத்தில் உள்ள டூமூர் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆயுதமேந்திய குழு தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதல்களின் விளைவாக சுமார் 800 வீடுகளும் பணியிடங்களும் அழிக்கப்பட்டுள்ளன.
அது மாத்திரமன்றி போகோ ஹராமால் வெள்ளிக்கிழமை டிஃபா பகுதியும் தாக்கப்பட்டது. அதன்போது இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
நைஜீரியாவின் எல்லையில் அமைந்துள்ள டிஃபா பகுதி, 2015 பெப்ரவரி முதல் போகோ ஹராமால் அடிக்கடி தாக்குதலுக்கு முகங்கொடுத்து வருகின்றது.
2009 ஆம் ஆண்டு முதல் போகோ ஹராம் நடத்திய தாக்குதல்களில் நைஜரில் 20,000 க்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர், 2 மில்லியனுக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM