(எம்.மனோசித்ரா)
விமான நிலையத்தை திறந்து நாட்டுக்கு வரும் வெளிநாட்டவர்களை கட்டுப்படுத்துமளவிற்கு இலங்கையில் நுட்பமான செயன்முறைகள் எவையும் இதுவரையில் உருவாக்கப்படவில்லை. விமான நிலையங்கள் திறக்கப்பட்டதன் பின்னர் உருவாகக் கூடிய கொத்தணிகளை கட்டுப்படுத்த கூடியவாறு அரசாங்கத்திடம் உள்ள வேலைத்திட்டங்கள் என்ன என்று பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்க கேள்வியெழுப்பினார்.
அவர் மேலும் கூறுகையில், விமான நிலையத்தை திறந்து நாட்டுக்கு வரும் வெளிநாட்டவர்களை கட்டுப்படுத்துமளவிற்கு இலங்கையில் நுட்பமான செயன்முறைகள் எவையும் இதுவரையில் உருவாக்கப்படவில்லை. வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை மாத்திரமல்ல. குறைந்தபட்சம் கொழும்பில் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களையே அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாமலுள்ளது.
உக்ரைனிலிருந்து வந்த நபரொருவரால் தான் இலங்கையில் இரண்டாவது அலை ஏற்பட்டது என்று அரசாங்கம் தான் கூறுகிறது. மினுவாங்கொடை கொத்தணியின் பின்னர் சுமார் 30,000 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள். இவ்வாறான நிலையில் விமான நிலையம் திறக்கப்பட்டதன் பின்னர் உருவாகக் கூடிய கொத்தணிகளை கட்டுப்படுத்துவதற்கான எந்தவொரு வேலைத்திட்டமும் அரசாங்கத்திடம் தற்போது வரையில் இல்லை.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவித்தலுக்கமைய இவ்வருடம் பெப்ரவரி மாதம் இலங்கையில் விமான நிலையங்கள் மூடப்பட்டிருந்தால் இன்று இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. நாம் விரும்பும் நேரத்தில் எதனையும் செய்யலாம் என்ற அரசாங்கத்தின் எண்ணமே இந்த நிலைமைக்கு காரணமாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM