( மயூரன் )
யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் தாய்ப்பால் அருந்திய குழந்தையொன்று மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளது.
திருநெல்வேலி , பாரதிபுரத்தைச் சேர்ந்த சிவதாசன் கிசானா எனும் இரண்டரை மாத பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,
கடந்த சனிக்கிழமை காலை 7 மணியளவில் தனது குழந்தைக்கு தாய்ப்பாலினை ஊட்டிய தாய் , குழந்தையை நித்திரையாக்கி விட்டு , அதன் பின்னர் சமையல் வேலைகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளார்.
குழந்தை நீண்ட நேரமாக தூக்கத்தில் இருந்து எழும்பாத நிலையில் , சமையல் வேலைகளை முடித்துக்கொண்டு குழந்தையை தூக்கிய வேளை குழந்தை அசைவின்றி உடல் குளிர்ந்த நிலையில் இருந்துள்ளது.
இந்நிலையில், உடனடியாக குழந்தையை வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போது , குழந்தையை பரிசோதித்த வைத்தியர் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதா தெரிவித்துள்ளார்.
தாய்ப்பால் கொடுத்த பின்னர் , குழந்தையை படுக்க வைத்தமையால் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டே குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM