சிறைத் தண்டனை அனுபவித்துவரும் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில்,தொற்றுக்குள்ளான வாஸ் குணவர்தன சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் வெலிகடை சிறைச்சாலையில் சிறைத் தண்டனை அனுபவித்துவருகின்றார்.
இன்று சனிக்கிழமை நிலைவரப்படி இதுவரை 2780 கைதிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள். அதில் 98 சிறைச்சாலை அதிகாரிகளும் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.
வெலிகடை சிறைச்சாலையில் 2000 க்கும் மேற்பட்ட கைதிகள் விரைவான-ஆன்டிஜென் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் 129 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை மொத்தம் 890 கைதிகளும் மற்றும் 46 சிறைச்சாலை அதிகாரிகளும் குணமடைந்துள்ளார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM