(நா.தனுஜா)
இலங்கையிலுள்ள சிறுவணிக முயற்சிகளுக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கும் தொழிற்படையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கும் 3.6 பில்லியன் ரூபா பெறுமதியிலான செயற்திட்டமொன்று அமெரிக்காவினால் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள அமெரிக்கத்தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.
அதன்படி சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவரகத்தினால் நிதியளிக்கப்படும் இந்த செயற்திட்டத்தின் ஊடாக சிறுவணிக முயற்சிகளுக்கு அவசிமயான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்படவுள்ளன.
இதனூடாக ஏற்கனவே கொரோனா வைரஸ் பரவலினால் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் புதிய சிறுவணிக முயற்சிகள் உருவாக்கப்படுவதற்கும் தொழிற்படையில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப்படுவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.
'நிலைபேறான பொருளாதார வளர்ச்சியில் தனியார்துறையினரின் பங்களிப்பை வலுப்படுத்துதல் மற்றும் வணிகங்களின் இலாபத்தை அதிகரித்தல் ஆகியவற்றுக்குப் பங்களிப்புச்செய்வதற்கான அமெரிக்காவின் கடப்பாடு இந்த செயற்திட்டத்தின் மூலம் நிறைவேற்றப்படும்' என்று இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்திருக்கிறார்.
அதுமாத்திரமன்றி சரியான தருணத்தில் வழங்கப்படும் இந்த உதவி கொரோனா வைரஸ் பரவலினால் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கையின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கு உதவும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM