எதிர்கால தன்னலம் கருதியே எதிர் கட்சிகள் இலங்கையினுடைய வரவு செலவு திட்டத்திற்கு வாக்களிப்பதில்லை என நேற்றைய வாக்கெடுப்பில் தமிழ் தலைவர்கள் எதிர்த்து வாக்களிக்காமை தொடர்பில் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று (11.12.2020) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்றைய வாக்கெடுப்பில் தமிழ் தலைவர்கள் கலந்து கொள்ளாமை தொடர்பில் அவரிடம் வினவியபோதே அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர் குறித்த விடயம் தொடர்பில் மெலும் தெரிவிக்கையில்,
இலங்கையினுடைய வரவு செலவு திட்டத்திலே எதிர்க் கட்சிகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாது தவிர்த்து வருவதென்பது இன்று நேற்றல்ல இது தொடர்ச்சியாக இடம்பெற்ற வருகின்ற விடயம்.
வரவு செலவு திட்டத்தை எதிர்த்தால் சலுகைகளை பெற்றுக்கொள்ள முடியாது போய்விடும் என்பதே இதற்கு காரணமாகின்றது.
மறைமுகமாக அந்த வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்ற வகையிலேயே நேற்றும் நடந்து கொண்டனர். ஆனால் இவர்கள் நினைத்திருந்தால் தமிழ் மக்கள் பற்றி சிங்கள தலைமைகள் இழிவாக பேசுகின்றமை தொடர்பில் கருத்துக்களை தெரிவித்து எதிர்த்து வாக்களித்திருக்கலாம். ஆனால் அதனை அதனை அவர்கள் செய்திருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்த்தோ அல்லது ஆதரவாகவோ வாக்களிக்காது விட்டதன் பிரதிபலன்களையும், நன்மைகளையும் அவர்கள் எதிர்காலத்தில் அனுபவிப்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM