(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
2005 ஆம் ஆண்டு ஆட்சியமைக்கும் போது யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுக்க முடிந்ததோ அதேபோல் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டினை மீட்டெடுப்போம் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை, 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இறுதி நாள் விவாதமான நிதி அமைச்சு மற்றம் நிதி இராஜாங்க அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்,
அவர் மேலும் கூறுகையில்,
நல்லாட்சியில் முன்னெடுக்கப்படும் என கூறப்பட்ட வேலைத்திட்டங்கள் நல்லாட்சி காலத்தில் நிறைவுக்கு வரும் என நான் நம்பினேன், ஆனால் துரதிஷ்டவசமாக அதற்கான வாய்ப்புகள் தோல்வியில் முடிவடைந்தது. எனினும் எமது வரவு செலவு திட்டம் உண்மையாகும்.
அதனை அடுத்த ஆண்டே பார்க்க முடியும். இப்போது அனுபவம் உள்ள குழுவொன்று ஆட்சியை கையில் எடுத்துள்ளது. 2005 ஆம் ஆண்டு எவ்வாறு நாட்டினை ஒரு திட்டத்திற்குள் கொண்டுவர முடிந்ததோ, யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுக்க முடிந்ததோ அதேபோல் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டினை மீட்டெடுப்போம். ஜனாதிபதியின் வேலைத்திட்டம் நாட்டிற்கு நல்லதொரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
தேசிய பாதுகாப்பு, தேசிய ஒற்றுமை மற்றும் நாட்டின் அபிவிருத்தியில் நாம் முக்கியத்துவம் கொடுக்கின்றோம். இந்த நிலையில் பிரிவினைவாத அழுத்தங்கள் மீண்டும் தலைதூக்குகின்றது. ஆனால் நாம் சகல மக்களையும் ஒன்றிணைந்து இலங்கையர்களாக வாழ நாம் விரும்புகின்றோம்.
ஆனால் ஒரு சிலர் அதனை குழப்ப நடவடிக்கை எடுக்கின்றனர். கொவிட் நிலைமையில் நாட்டினை மீட்டுள்ளோம். வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட்டு வருகின்றது, வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றது, வீதி அபிவிருத்தி துரிதப்படுத்தப்படுகின்றது. இவை அனைத்துமே வெறும் வாய் வார்த்தைகள் அல்ல, எனினும் இதனை தாங்கிக்கொள்ளாத நபர்கள் எம்மை விமர்சித்து வருகின்றனர்,
எனினும் மக்கள் எதற்காக எமக்கு வாக்களித்தனரோ அதற்கான நோக்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வோம். எமது வேலைத்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM