பொதுச் சுகாதாரப் பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த இருவருக்கு விளக்கமறியல்

Published By: Digital Desk 3

10 Dec, 2020 | 04:55 PM
image

(எம்.நியூட்டன்)

பொதுச் சுகாதாரப் பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் முற்படுத்தப்பட்ட இருவரை வரும் 21 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் காயத்திரி சைலவன் உத்தரவிட்டார். 

கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் விநியோகத்தில் கடந்த  செவ்வாய்க்கிழமை ஈடுபட்ட இருவரை வழிமறித்த நெல்லியடி பகுதிக்குப் பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகர், அனுமதிப்பத்திரத்தை காண்பிக்குமாறு கேட்டுள்ளார்.

அதன்போது அவர்கள் இருவரும் பொதுச் சுகாதார பரிசோதருடன் முரண்பட்டுள்ளனர். 

இந்தச் சம்பவம் தொடர்பில் பொதுச் சுகாதார பரிசோதகரால் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாடு தொடர்பில் குடிதண்ணீர் விநியோகத்தில் ஈடுபட்ட இருவரையும் கடந்த புதன்கிழமை விசாரணைக்கு அழைத்த பொலிஸார், அவர்களைக் கைது செய்துள்ளனர்.

பொதுச் சுகாதாரப் பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் அவர்கள் இருவரும் நேற்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

சந்தேக நபர்களில் ஒருவர் தகாத வார்த்தைகளால் ஏசியதாகவும் மற்றைய சந்தேக நபர் தன்னை தாக்க வந்ததாகவும் பொது சுகாதாரப் பரிசோதகர் மன்றுரைத்தார்.

வழக்கை ஆராய்ந்த சந்தேக நபர்கள் இருவரையும் வரும் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிவான், அன்றுவரை வழக்கை ஒத்திவைத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06