(க.பிரசன்னா)
மஹர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளின் நலன் தொடர்பில் அறிந்து கொள்வதற்கு உறவினர்கள் உரையாடுவதற்கு வசதியாக 24 மணி நேரமும் இயங்கக்கூடிய தொலைபேசி சேவையினை சிறைச்சாலைகள் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.
மஹர சிறைச்சாலை கலவரத்தின் பின்னர் கைதிகளின் நலன் தொடர்பில் உறவினர்கள் அறிந்து கொள்வதற்காகவும் சிறைச்சாலைகளுக்கு முன்பாக பொதுமக்கள் கூடுவதை தவிர்த்துக் கொள்வதற்கும் வசதியாக இத்தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளர் (நிர்வாகம், புனர்வாழ்வு மற்றும் திறன் மேம்பாடு) சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
0112678600 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக 24 மணி நேரமும் குறித்த சேவையை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அண்மைய மஹர சிறைச்சாலை கலவரத்தில் கைதிகள் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது தொடர்பாக அவர்களின் உறவினர்கள் அழைப்பை ஏற்படுத்தி விசாரித்துக் கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுளன. இதற்காக சிறை அதிகாரிகள் குழுவொன்றும் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM