2021 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது.
2021 ஆம் நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் கடந்த ஒக்டோபர் 06ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட பின்னர், ஒக்டோபர் 20 ஆம் திகதி பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதையடுத்து பிரதமரும், நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால் 2021 நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு (வரவுசெலவுத்திட்ட உரை) பாராளுமன்றில் கடந்த நவம்பர் 17 ஆம் திகதி பிற்பகல் 1.40 மணியளவில் முன்வைக்கப்பட்டது.
பிரதமரினால் வரவுசெலவுத்திட்டம் முன்வைக்கப்பட்டதையடுத்து கடந்த 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை வரவுசெலவுத்திட்டம் தொடர்பான இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்றது.
தொடர்ந்து 2021 வரவுசெலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு 99 மேலதிக வாக்குகளால் அன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்புக்கு 151 வாக்குகள் ஆதரவாகவும், 52 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டிருந்தது.
அதன் பின்னர் வரவுசெலவுத்திட்ட குழு நிலை அமர்வு கடந்த நவம்பர் 23 ஆம் திகதி முதல் டிசம்பர் 10 ஆம் திகதி (இன்று) வரை இடம்பெற்று வருவதுடன், வரவுசெலவுத்திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று பிற்பகல் 05.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM