கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையை கட்டுப்படுத்திய செயற்பாட்டில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் மீது வாள் வெட்டு இடம்பெற்றது.
கடந்த திங்கட்கிழமை ஒன்பது மணியளவில் கட்சன் வீதியில் வைத்து குறித்த இளைஞன் மீது வாள் வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தங்களது கிராமத்தில் இடம்பெற்று வந்து கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை உள்ளிட்ட சமூக விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த கிராம இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பொலிஸாரின் உதவியுடன் நடவடிக்கைகளில் இறங்கியிருந்தனர்.
இளைஞர்களின் நடவடிக்கை காரணமாக பல கசிப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனை செய்வோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அத்தோடு கசிப்பு உற்பத்தி செய்யும் இடங்களும் அடையாளம் காணப்பட்டு அழிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் குறித்த இளைஞர்கள் மீது கோபம் கொண்ட சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுப்படுகின்ற குழுவினர் இந்த இளைஞர்கள் தனித்தனியாக பயணிக்கின்ற போது அவர்களை இலக்கு வைத்து தாக்குதலை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
அந்த வரிசையில் தான் குறித்த இளைஞன் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஏனைய இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM