தடுப்பில் இருக்கும் போது எமக்கு இரசாயன உணவு தந்தார்கள். ஊசி போட்டார்கள். ஊசி போட்டவுடன் ஒரு போராளி உயிரிழந்தார். தடுப்பில் வைத்து எமக்கு ஏதோ செய்துள்ளார்கள். இவ்வாறாக விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நல்லிணக்க பொறிமுறை தொடர்பில் மக்கள் கருத்தறியும் அமர்வு நேற்று முன்தினம் சனிக்கிழமை ஒட்டுசுட்டானில் நடைபெற்றது. அந்த அமர்வில் கலந்து கொண்டு நல்லிணக்க பொறிமுறை தொடர்பில் மக்கள் கருத்தறியும் குழுவினரிடமே குறித்த போராளி அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
இறுதி யுத்தத்தின் போது சரணடைந்தவர்கள் வெள்ளைக்கொடியுடன் போனதற்கான ஆதாரங்கள் நிறைய இணையங்களில் வெளிவந்துள்ளன. அதற்கான பல சாட்சியங்களும் இருக்கின்றன. அவர்கள் பயத்தில் கதைக்கின்றார்கள் இல்லை. கதைக்க போனால் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. எங்களுக்கு இலங்கை அரசாங்கம் நீதியை பெற்று தரப்போவதில்லை. தமிழ் அரசியல் கட்சிகள் கூட தற்போது "பல்டி" அடிக்கின்றன. எனவே கண்டிப்பாக சர்வதேசத்தில் இருந்து நடுநிலையான நாடுகள் தான் எங்களுக்கு நீதியை வழங்க வேண்டும்.
யுத்த தர்மம் என்ற ஒன்று இருக்கின்றது. இலங்கை அரசாங்கம் இராணுவத்திற்கு யுத்த தர்மம் என்றால் என்ன என்பதனை போதிக்க வேண்டும். சரணடைந்தவர்களை சுடுவது நியாயம் அல்ல. ஏனெனில் அவர்கள் நிராயுத பாணியாக தான் சரணடைந்தவர்கள். நான் ஒரு முன்னாள் போராளி. தடுப்பால வந்த பின்னர் யுத்த நினைப்பை விட்டு ஒதுங்கி இருக்கின்றோம்.
தடுப்பில் இரசாயன உணவு தந்தார்கள்
நாங்கள் தடுப்பில் இருக்கும் போது எமக்கு இரசாயன உணவை தந்து இருக்கின்றார்கள். நான் தடுப்புக்கு போக முன்னர் நூறு கிலோ தூக்கிக் கொண்டு கிலோ மீற்றர் கணக்குக்கு ஓடுவேன். தடுப்பால வந்த பிறகு ஒரு பொருளைக் கூட தூக்க முடியவில்லை. அத்துடன் கண் பார்வையும் குறையுது. இதில் இருந்து எங்களுக்கு ஏதோ நடந்து இருக்கின்றது என்பது எமக்கு தெளிவாக தெரிகின்றது.
தடுப்பூசி போட்டார்கள்
தடுப்பில நாங்கள் இருந்த போது எமக்கு எல்லாம் தடுப்பு மருந்து ஏற்றினார்கள். ஏதோ ஒரு ஊசி போட்டார்கள். எது என்ன தடுப்புக்கான ஊசி என எமக்கு தெரியாது. அந்த தடுப்பு ஊசி போட்ட போராளி ஒருவர் ஊசி போட்ட அன்றைய தினம் இரவே உயிரிழந்தார்.
அத்துடன் தடுப்பில் இருந்து வெளியேறிய 12 ஆயிரம் போராளிகளுக்கும் மறுவாழ்வு அளிக்கப்பட்டாலே மீண்டும் போராட்டம் துளிர்க்காது என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM