இந்தியாவில் மர்ம நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Published By: Digital Desk 3

09 Dec, 2020 | 11:06 AM
image

இந்தியாவில் ஆந்திரா மாநிலத்தில் எலுரு நகரில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த நான்கு நாட்களில் (டிசம்பர் 5 முதல்) 525 நோயாளிகள் கால்-கை வலிப்பு, தலைச்சுற்றல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மர்ம நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வலிப்பு  வந்து நோயாளிகள் திடீரென மயங்கி விழுந்துள்ளனர். நோயாளிகள்  தலைவலி மற்றும் தலைச்சுற்றல் வருவதாக தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலையில் 171 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாகவும், 354 பேர் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

73 பேர் ஒன்று முதல் பன்னிரண்டு வயது வரையிலும், 288 நோயாளிகள் 12 முதல் 35 வயது வரையிலும், 169 பேர் 35 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும் உள்ளனர். .

இதற்கிடையில், மர்ம நோய் எலுரு நகரம் மற்றும் அண்டை கிராமங்களில் உள்ள பிற காலனிகளுக்கும் பரவி வருவதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

எய்ம்ஸ் மருத்துவ கண்காணிப்பாளர் மங்களகிரி, இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், நோய்க்கான காரணத்தை இதுவரை அடையாளம் கண்டறியமுடியவில்லை  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஆந்திர மாநிலத்தில் ஏலூரு நகரில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்த மாதிரியை பரிசோதனை செய்ததில் அதில் ஈயம் மற்றும் நிக்கல் துகள்கள் இருப்பது முதல் கட்ட பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக அம்மாநில முதல்வர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52