நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட கினிகத்தேன, பிளக்வோட்டர் தோட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதி முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.
தோட்டத்தில் இருந்து எவரும் வெளியேறுவதற்கும் அத்தோட்டத்தின் கீழ் மற்றும் மேல் பிரிவுகளுக்கு வெளியார் வருவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுவருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கும் சுகாதார அதிகாரிகள், மறுஅறிவித்தல் விடுக்கப்படும்வரை தனிமைப்படுத்தல் நடைமுறைகள் தொடரும் எனவும் கூறினர்.
எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மேலும் 600 பேரிடம் பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகளை பெறும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.
ஹட்டன், அம்பகமுவ பொது சுகாதார காரியாலயத்துக்குட்பட்ட பகுதியில் நேற்று மாத்திரம் 25 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM