(இராஜதுரை ஹஷான்)
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் தற்காலிகமாக மூடப்பட்ட கொம்பனி வீதி ரயில் நிலையம் நாளை முதல் மீள திறக்கப்படும். ரயில் சேவையில் முறையான சுகாதார சேவைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் பாரிய நெருக்கடி ஏற்படும்.என ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் பிரதான செயலாளர் கசுன் சாமர தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கொம்பனி வீதி ரயில் நிலைய பொறுப்பதிகாரி கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் ரயில் நிலையம் கடந்த முதலாம் திகதி மூடப்பட்டது.
கொம்பனி வீதி ரயில் நிலையத்துக்கு புதிதாக நிலைய பொறுப்பதிகாரி நியமிக்கப்பட்டதன் பின்னர் நிலையத்தை மீள திறக்க தீர்மானிக்கப்பட்டது.
ரயில் சேவையில் முறையான சுகாதார சேவைகள் பின்பற்றப்படவில்லை. சுகாதார பாதுகாப்பு குறித்து சுகாதார அமைச்சு அறிவுறுத்தயுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை ரயில்வே திணைக்களம் முழுமையாக பின்பற்றவில்லை. ரயில் சேவையின் ஊடாக கொவிட்-19 வைரஸ் தாக்கம் மூன்றாவது கொத்தணியாக பரவுமாயின் அதற்கு ரயில்ணவே திணைக்களம் முழு பொறுப்பினையும் ஏற்க வேண்டும்.
ரயில் சேவையினை பயன்படுத்தும் பயணிகளின் தகவல்கள், 1 மீற்றர் தூர இடைவெளி உள்ளிட்ட விடயங்களில் சிறந்த திட்டங்களை வகுத்து அதனை ரயில்வே திணைக்களத்துக்கு சமர்ப்பித்தோம்.
ஆனால் ரயில்வே திணைக்களம் இவற்றை செயற்படுத்தாமல் பொறுப்பற்ற விதத்தில் செயற்படுகிறது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM