வரவு- செலவு திட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்படும் - பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல

Published By: Gayathri

05 Dec, 2020 | 04:50 PM
image

(இராஜதுரை ஹஷான்)

2021 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்படும். தேசிய உற்பத்திகளை மேம்படுத்துவது அரசாங்கத்தின் பிரதான இலக்கு என பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல  தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தவும், பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கவும்  அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து சிறந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. 

2021 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம் குறித்து எதிர்த்தரப்பினர் போலியான குற்றச்சாட்டுகளை அரசியல் நோக்கம் கருதி முன்வைக்கிறார்கள்.

நாட்டு மக்களுக்கு தற்காலிகமாக நிவாரணம் வழங்கும் வகையில் வரவு - செலவு திட்டம் தயாரிக்கப்படவில்லை. 

இம்முறை வரவு - செலவு திட்டம் மக்களின் கருத்துக்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்கள். 

ஆகவே மக்கள் சுயமாக முன்னேற்றமடையவும்,  நிரந்தர முன்னேற்றம் அடையவும் வரவு - செலவு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டுகான வரவு - செலவு திட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்படும். தேசிய உற்பத்திகளை மேம்படுத்துவது அரசாங்கத்தின் பிரதான இலக்கு என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08