ஐந்தாம்தரப் புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைவாக ஒவ்வொரு பாடசாலைகளுக்கும் 6 ஆம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பப்படிவங்களை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்குமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தியிருக்கிறது.
2020 ஆம் ஆண்டிற்கான ஐந்தாம்தரப் புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் நிர்ணயிக்கப்பட்ட வெட்டுப்புள்ளியை விட அதிக புள்ளிகளைப்பெற்ற மாணவர்களை 6 ஆம் தரத்திற்கு பாடசாலைகளுக்கு இணைத்துக்கொள்வதற்கான அனுமதிப்பத்திரங்கள் கோரப்பட்டுள்ளன.
அதன்படி விண்ணப்பப்படிவங்கைள அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களின் ஊடாகப் பெற்றுக்கொள்வதற்குப் பெற்றோருக்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது. அந்த விண்ணப்பப்படிவத்தை சரியாகப் பூர்த்திசெய்து, எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னதாக குறித்த மாணவர் பரீட்சைக்குத் தோற்றிய பாடசாலை அதிபரிடம் கையளிக்குமாறு கல்வி அமைச்சு பெற்றோர்களை வலியுறுத்தியிருக்கிறது.
அதேவேளை, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முடக்கப்பட்டிருக்கும் பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்களின் விண்ணப்பப்படிவங்களை உரிய பாடசாலைகளுக்கு அனுப்பிவைப்பதற்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சு வலயக்கல்விப் பணிப்பாளர்களுக்கும் பாடசாலை அதிபர்களுக்கும் அறிவுறுத்தியிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM