வடக்கு மாகாண பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமை போன்று இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
கொரோனா அச்சம் காரணமாக கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளும் யாழ்ப்பாணத்தில் காரைநகர் இந்துக் கல்லூரியும் மூடப்பட்டிருந்தன.
எனினும் அப்பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் எவருக்கும் கொரோனா தொற்றுக்கள் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து பாடசாலைகள் எதிர்வரும் 7 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வடக்கு சுகாதார பணிப்பாளர் வடக்கு கல்வி அமைச்சின் செயலாளருக்கு உரிய அறிவித்தலை வழங்கியுள்ளார்.
இந்நிலையில், தரம் 6 தொடக்கம் க.பொ.த உயர்தரம் வரையான வகுப்புக்கள் எதிர்வரும் 7 ஆம் திகதி தொடக்கம் நடைபெறும்.
நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகளில் தரம் 1 தொக்கம் 5 வரையான வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு இதுவரை கல்வி அமைச்சு அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM