(செ. தேன்மொழி)
பேலியகொட மற்றும் அத்துருகிரிய ஆகியபகுதிகளில் நேற்று வியாழக்கிழமை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது ஐஸ் மற்றும் ஹெரோயின் ஆகிய போதைப் பொருளுடன் சந்தேகநபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேலியகொட மேம்பாலத்திற்கு அருகில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது 5 கிராம் 240 மில்லிகிராம் ஹெரோயினுடன் களனி பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, பேலியகொட - நவலோக்க சுற்றுவட்டத்திற்கு அருகில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருளுடன் இரு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சந்தேகநபர் ஒருவரிடமிருந்து 10 கிராம் ஐஸ் போதைப்பொருளும், மற்றையவரிடமிருந்து ஒரு கிராம் 500 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்கள் இருவரும் கிராண்ட்பாஸ் மற்றும் வெல்லம்பிட்டி பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
மேலும் அத்துருகிரிய - ஹபரகட பகுதியில் 47 வயதுடைய சந்தேகநபரொருவர் 2 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஹபரகட பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM