(செ.தேன்மொழி)
மட்டகளப்பு - புனானை சிகிச்சை நிலையத்திற்கு கொவிட்-19 வைரஸ் தொற்றாளர்கள் அழைத்துச் சென்ற பஸ் பிரிதொரு பஸ்சுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் வைரஸ் தொற்றாளர்கள் இருவர் உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
வெலிகந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அசேலபுர பகுதியில் இன்று காலை 7.15 மணியளவில் கொழும்பிலிருந்து புனானை கொவிட் சிகிச்சை நிலையத்திற்கு தொற்றாளர்கள் ஏற்றிச் சென்ற பஸ் , காத்தான்குடியிலிருந்து பொலன்னறுவை பகுதியை நோக்கி சென்ற பிரிதொரு பஸ் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது காயமடைந்த சாரதிகள் இருவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பஸ்ஸில் 23 தொற்றாளர்கள் காணப்பட்டதுடன் அவர்களில் இருவரும் காயமடைந்துள்ளனர்.
தொற்றாளர்கள் அனைவரும் மீண்டும் பாதுகாப்பான முறையில் புனானை சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM