அமெரிக்காவின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ் வியாழக்கிழமை இலங்கை-அமெரிக்கர் ரோஹினி கொசோக்லுவை தனது உள்நாட்டு கொள்கை ஆலோசகராக நியமித்தார்.
ரோஹினி கொசோக்லு அமெரிக்க மக்கள் எதிர்கொள்ளும் சில முக்கியமான பிரச்சினைகள் குறித்து நிபுணர் மட்டுமல்ல, செனட் சபை உறுப்பினர் மற்றும் ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் எனது நெருங்கிய மற்றும் நம்பகமான உதவியாளர்களில் ஒருவராகவும் இருந்தார் என்றும் கமலா ஹரிஸ் கூறினார்.
ரோகினி கொசோக்லுவின் பெற்றோர் வைத்தியர் விஜயதேவேந்திர ரவீந்திரன் மற்றும் ஷோபனா ரவீந்திரன் ஆகியோர் 1980களின் முற்பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர்களாவர்.
கடந்த 2018 ஆம் ஆண்டில், அமெரிக்க துணை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளாரான கமலா ஹரிஸின் தலைமைப் பணியாளராகப் ரோஹினி கொசோக்லு பொறுப்பேற்றார்.
இதன்போது அமெரிக்க செனட்டர் ஒருவருக்கு தலைமைப் பணியாளர் பதவியை வகித்த ஒரே அமெரிக்க ஆசியப் பெண் என்ற பெருமையையையும் அவர் பெற்றார்.
ரோஹினி கொசோக்லு, ரோஹினி மிச்சிகன் பல்கலைக்கழகம் மற்றும் ஜோர்ஜ் வொஷிங்டன் பல்கலைக்கழகத்தின் பட்டதாரி ஆவார். மிச்சிகன் செனட்டர் டெபி ஸ்டெபெனோ சார்பில் பணியாற்றும்போது கடிதத் தொடர்பு மேலாளராக அரசியலில் நுழைந்தார்.
பட்டம் பெற்ற பின்னர் ஸ்டீபெனோவின் மூத்த கொள்கை ஆலோசகராக பணியாற்றினார். பின்னர் அவர் கொலராடோ செனட்டர் மைக்கேல் பென்னட்டின் கீழ் ஒரு மூத்த சுகாதார ஆலோசகராக பணியாற்றினார். அந்த நேரத்தில் ஒபாமா கெயார் திட்டத்திலும் பணியாற்றினார்.
ஏழு ஆண்டுகள் பென்னட்டின் அலுவலகத்தில் பணியாற்றிய ரோஹினி, அப்போது செனட்டர் கமலா ஹரிஸின் துணைத் தலைவராக பதவி உயர்வு பெற்று தற்போது அமெரிக்க துணைத் தலைவரின் உள்நாட்டு கொள்கை ஆலோசகராகவும் தரம் உயர்ந்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM