கொழும்பில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் ; இன்று 5 மரணங்கள் பதிவு

Published By: Digital Desk 4

03 Dec, 2020 | 10:20 PM
image

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கொவிட் தொற்றினால் 5 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. இவ்வாறு பதிவான 5 மரணங்களில் ஒரு பெண்ணும் 4 ஆண்களும்  உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 129 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றால் உயிரிழந்த பெண் கொலன்னாவை பகுதியைச் சேர்ந்தவர் எனவும், நான்கு ஆண்களும் கொழும்பு 02, கொழும்பு 10 மற்றும் கொழும்பு 12 ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொலன்னாவையில் இறந்த பெண் 56 வயதுடையவெரனவும், கொழும்பு 12 பகுதியில் மரணித்த ஆண் 89 வயதுடையவரெனவும் கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த இரு ஆண்களில் ஒருவர் 85 வயதுடையவரெனவும் மற்றையவர் 71 வயதுடையவரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொழும்பு 2 பகுதியைச் சேர்ந்த 78 வயதுடைய ஆணொருவரும் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 25,760 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை  19,032 ஆக அதிகரித்துள்ளது.

433 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளதுடன் 6,604 பேர் தொடர்ந்தும்  வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இலங்கையில், 129 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோட்டாவின் நூலை வாசிக்கவில்லை - வாசிக்கும்...

2024-03-19 14:42:35
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 5...

2024-03-19 14:44:49
news-image

தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவிலிருந்து விலகினார்!

2024-03-19 14:37:52
news-image

சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் சட்டப்படி வேலை...

2024-03-19 14:30:11
news-image

ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள்...

2024-03-19 14:40:27
news-image

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் தரையிறக்கம்!

2024-03-19 14:13:26
news-image

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

2024-03-19 14:18:01
news-image

அவுஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ்.பல்கலைக்கு...

2024-03-19 14:04:31
news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:41:34
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07