இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவை மூடுவதற்கு ஆலோசனை..!

Published By: J.G.Stephan

03 Dec, 2020 | 02:29 PM
image

(க.பிரசன்னா)
சுயாதீன ஆணைக்குழுவான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினை மூடி அதன் ஊழியர்களை மின்சக்தி அமைச்சு மற்றும் ஏனைய அரச நிறுவனங்களுக்கு உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜயசுந்தரவினால் கையொப்பமிடப்பட்ட கடிதமொன்று திறைச்சேரிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் குறித்த கடிதமானது உத்தியோகபூர்வமாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெறவில்லையென நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2021 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தில் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கே முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

தடைப்பட்டுள்ள மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்துவதற்கான திறமையான பணிச்சூழலை உருவாக்குவதற்கான மாற்றங்கள் குறித்தே முன்மொழிவுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் ஜனாதிபதியின் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவின் பிரகாரம் குறித்த கடிதம் திறைச்சேரிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிலுள்ள ஊழியர்களை, அவர்களின் தகைமைக்கு ஏற்ற வகையில், தேசிய திட்டமிடல் திணைக்களம் அல்லது மின்சக்தி அமைச்சு ஆகியவற்றுக்குள் உள்வாங்குமாறும் ஜனாதிபதியின் செயலாளர் கடிதம் மூலம் திறைச்சேரிக்கு அறிவித்துள்ளார்.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட விடயங்களை, நுகர்வோர் அதிகார சபை அல்லது மின்சார சபையின் ஊடாக பிரதியீடு செய்யும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது மூடப்படக்கூடாதென பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையோடு தொடர்புபட்ட, தனியார் மின் உற்பத்தியாளர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கூடாக, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவை மூடுவதற்கு முனைகின்றார்கள் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். பாரிய ஊழலொன்றுக்காகவே கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் கதவு திறக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31