அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த 24 மணிநேரத்தில் 2,760 பேர் உயிரிழந்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்த நாளில் இருந்து பதிவான அதிகூடிய எண்ணிக்கை இதுவாகும்.
கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி அன்று 2,752 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் நேற்று மாத்திரம் அதிகூடிய உயிரிழப்பாக 2,760 பதிவதாகியுள்ளது.
இந்நிலையில்,273,000 க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் தற்போது வரை கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை 1,88,853 புதிய கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளார்கள்.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதால், மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 40 இலட்சத்தை நெருங்குகிறது.
அத்துடன், 100,226 அமெரிக்கர்கள் தற்போது வைரஸால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தி கொவிட் கண்காணிப்பு திட்டம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் நடந்த நன்றி தெரிவிப்பு விடுமுறையால் கொரோனா விதிமுறைகள் முற்றிலும் மீறப்பட்டு உள்ளதாகவும் அதன் விளைவாக இம்மாதம் பெருந் தொற்று அதிகரிக்கக் கூடும் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM