உலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரசின் முதல் கட்ட அலை முடிந்த நிலையில், தற்போது 2 ஆவது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் மட்டுமன்றி, பல்வேறு நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது.
உலகம் முழுவதும் தற்போதைய நிலைவரப்படி, 64,834,951 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 44,934,851 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்கத்திற்கு இதுவரை 1,499,175 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, கொரோனாவுக்கு எதிரான போராட்டம் முடிந்துவிட்டதாக நம்பாதீர்கள் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில்,
இன்று, இங்கிலாந்தில், பொருளாதாரத்தின் குறிப்பிடத்தக்க பகுதிகளைத் திறந்து, தேசிய கட்டுப்பாடுகளை முடித்துவிட்டோம்.
அதிகப்படியான நம்பிக்கையுடன் நாம் கொண்டு செல்லப்படாமல் இருப்பது முக்கியம். கொரோனாவுக்கான போராட்டம் முடிந்துவிட்டது என்ற அப்பாவியான நம்பிக்கையில் மக்கள் இருக்கக்கூடாது.
எப்படி இருந்தாலும், தடுப்பூசி இறுதியாக விநியோகிக்கத் தொடங்கும் போது மிகப்பெரிய சவால்கள் இருக்கும். மருந்துகள் 70 டிகிரி செல்சியசில் சேமிக்கப்படுகிறது.
ஒவ்வொரு நபருக்கும் மூன்று வாரங்கள் இடைவெளியில் இரண்டு ஊசி தேவைப்படுகிறது. எனவே கிட்டத்தட்ட பாதிக்கப்படக்கூடியவர்கள் பாதுகாக்கப்படுவதற்கு தவிர்க்க முடியாமல் சில மாதங்கள் ஆகும்” என்று கூறியுள்ளார்.
இதேவேளை பைசர்-பயோஎன்டெக்கின் கொரோனா தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கு மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஒழுங்குமுறை நிறுவனம் அளித்த பரிந்துரையை இங்கிலாந்து அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. அடுத்த வாரம் முதல் பைசர் கொரோனா தடுப்பு மருந்தைப் பயன்படுத்தலாம் என்று இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.
கூடவே கொரோனா தடுப்பூசிகள் சர்வதேச குற்றவாளிகள் கும்பல்களால் குறிவைக்கப்படலாம் என இன்ர்போல் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக இன்டர்போல் அமைப்பின் பொதுச்செயலாளர் ஜூவர்ஜின் ஸ்டாகாக் கூறுகையில்,
கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அரசாங்கங்கள் தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இந்த நடவடிக்கைகளில் நுழைந்து தடுப்பூசி விநியோக சங்கிலியை சீர்குலைக்க குற்றச்செயலில் ஈடுபடுவோர் திட்டமிடுகின்றனர்.
இந்த குற்றவாளிக் கும்பல் போலியான இணையதள பக்கங்கள் மூலமாகவும், போலியான தகவல்கள் மூலமாகவும் பொதுமக்களை குறிவைக்கின்றனர். இது பொதுமக்களின் உடல்நலத்துக்கு மட்டுமல்லாமல் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்துவதாகும் என்று கூறியுள்ளார்.
உலக போரைப் போன்று உருவெடுத்திருக்கும் கொரோனா வைரஸ்தாக்கத்தை கட்டுப்படுத்த வேண்டுமானால் உலக நாடுகள் ஒன்றிணைந்து இந்த சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டும். இன்றேல் இந்த அழிவில் இருந்து உலக நாடுகள் மக்களை காப்பது இயலாத காரியமாகிவிடும்
வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM