(இராஜதுரை ஹஷான்)
ரயில் போக்குவரத்து சேவை கொவிட்-19 வைரஸ் பரவலின் மூன்றாவது கொத்தணியாக மாறும் சூழ்நிலையே தற்போது காணப்படுகிறது. சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை முறையாக செயற்படுத்தும் திட்டங்களை ரயில் திணைக்களம் செயற்படுத்தவில்லை.
ஆகவே இவ்விடயம் குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கசுன் சாமர அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தவும் வேளையில் அத்தியாவசிய சேவை நிமித்தம் ரயில் போக்குவரத்து சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ரயில் சேவையினை பயன்படுத்தும் பயணிகள் தொடர்பான தகவல்களை பெறுவதற்கும், ரயில் நிலையத்தில் சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும் முறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.
பாதுகாப்பற்ற முறையில் ரயில் போக்குவரத்து சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொம்பனி தெரு ரயில் நிலைய பொறுப்பதிகாரிக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் ரயில் நிலைய சேவையாளர்கள் அனைவரும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
கொம்பனி வீதி ரயில் நிலையத்தில் இருந்து பயணித்த பயணிகளின் பாதுகாப்பு அவதான நிலையில் உள்ளது. கொவிட்-19 வைரஸ் பரவலின் மூன்றாவது கொத்தணியாக ரயில் சேவை மாறும் தன்மை காணப்படுகிறது.
சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் எவ்வித திட்டங்களும் ரயில் திணைக்களம் இதுவரையில் வகுக்கவில்லை. ரயில் சேவையின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் முறையான நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்க வேண்டும், எனத் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM