நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தையே விரும்புகின்றனர். அதன் வெளிப்பாடு பாதயாத்திரை ஊடாக உலகிற்கு அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் உண்மையை வெளிப்படுத்த விடாது ஊடகங்கள் மிகவும் மோசமான முறை யில் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றன என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார்.
பாதயாத்திரையை குழப்புவதற்கு முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் கொழும்பைநோக்கிசெல்வதையாராலும் தடுத்துவிடமுடியாது. பொதுமக்கள் எம்முடன் உள்ளமை உலகிற்கு வெளிப்பட்டுள்ளது. ஆகவே தடைகளை கடப்பது கடினமானவிடயமல்ல எனவும் அவர் குறிப்பிட்டார்.
கூட்டுஎதிர் கட்சியின் அரசாங்கத்திற்குஎதிரானபாதயாத்திரை இரண்டாவது நாளாக நேற்று வெள்ளிக்கிழமை உத்துவன்கந்தைபகுதியில் ஆரம்பிக்கப்பட்டபோது அதில் கலந்துகொண்டுஉரையாற்றுகையிலேயே முன்னாள் ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார். அங்குஅவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,
பொதுமக்கள் வாழ்வாதாரபிரச்சினைகளைஎதிர் கொள்கின்றனர். எனவேநல்லாட்சிஅரசாங்கத்திற்குஎதிராகநாங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்படுகின்றோம் ஆனால் அரசாங்கம் எம்மை முடக்குவதற்கு பல்வேறு முயற்சிகளைமேற்கொண்டுவருகின்றது. பொதுமக்கள் ஆட்சிமாற்றத்தைவிரும்புகின்றனர். எமக்கு எதிராகவாக்களிததவர்கள் கூட இன்று பாதயாத்திரையில் கலந்துக் கொண்டு அரசாங்கத்திற்குஎதிராககுரல் கொடுக்கின்றனர்.
எனவேமாற்றம் தேவை என்பதுவெளிப்பட்டுள்ளது. அதனை பெற்றுக் கொள்ளபோராடவேண்டும். கொழும்பில் பாதயாத்திரை முடியும் போதுநாட்டின் அனைத்துமக்களும் எம்முடன் இருப்பார்கள்.
ஆனால் உண்மைகளை வெளியிடவிடாது அரசாங்கம் ஊடகங்கள் மீதுஅழுத்தம் கொடுத்துவருகின்றது. இந்தநிலைமாறவேண்டும். ஆட்சியாளர்கள் சட்டத்தைகையில் எடுத்துசெயற்படுகின்றனர். பொலிசார் மக்களுக்கு பாதுகாப்புவழங்கிசட்ட ஒழுங்குகளை உறுதிப்படுத்தவேண்டும். ஆனால் இன்றுதலைக்கீழான சூழலே காணப்படுகின்றது. ஆனால் மக்கள் என்னுடன் இருக்கின்றனர். எனவே தடைகள் பல்வேறு வழிகளில் ஏற்படுத்தப்படலாம். அவற்றைவெற்றிக் கொள்வோம்.இதனை எதிர்த்துபோராடி குரல் கொடுக்கும் போது இன்னோரன்ன அவதூறுகள் எமக்கு எதிராகமுன்வைக்கப்படுகின்றது. அரசியல் பழிவாங்கல்கள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM