இலங்கையில் 4 பெண்களில் ஒருவர் 18 வயதையடைய முன்னரே துஷ்பிரயோகம்..!

Published By: MD.Lucias

12 Dec, 2015 | 10:45 AM
image

இலங்கையில் நான்கு பெண்களில் ஒரு பெண் 18வயதினை அடையும் முன்னர் பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பெண்கள் மீதான வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவர அனைவரும் பொறுப்புடன் செயற்படுவோம் என்னும் தலைப்பிலான பெண்கள் 10நாள் செயற்பாட்டு வாரத்தின் இறுதி நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை காலை கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அதிகாரசபை, பால்நிலை அடிப்படையிலான வன்முறையை குறைக்கும் செயலணி ஆகிய இணைந்து அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பு மற்றும் பெண்கள் அமைப்புகள் அனுசரணையுடன் இந்த நிகழ்வினை நடாத்தியது. 

இதன் ஆரம்ப நிகழ்வில் பெண்களினால் மெழுகு திரியில் ஒளியேற்றப்பட்டு பெண்கள் மீதான வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவர அனைவரும் பொறுப்புடன் செயற்படுவோம் என்னும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இதன்போது பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பிலான விழி;ப்புணர்வு கருத்துரைகள் வழங்கப்பட்டதுடன் சூரியா பெண்கள் அமைப்பின் கலாசார குழுவின் விழிப்புணர்வு நிகழ்வுகளும் நடாத்தப்பட்டது.

இதன்போது பெண்களின் நிலைமைகள் தொடர்பில் துண்டுப்பிரசுரங்களும் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பினால் வெளியிடப்பட்டது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தவறிழைத்தவர்கள் தண்டனைகளில் இருந்து தப்பி சுதந்திரமாக நடமாடும் கலாசாரமொன்று நடைபெற்றுவருகின்றது.இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பரந்தளவில் காணப்படுதை அண்மைக்கால அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன. பெண்களுக்கு எதிரான வன்முறையை அனுபவிப்பதற்கான உயரிய ஆபத்தினைக்கொண்டுள்ளனர்.

2013ஆம் ஆண்டு அறிக்கையின்படி பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான வன்முறைகள் மற்றும் துஸ்பிரயோகங்கள் அதிகளவில் அறிக்கையிடப்பட்டுள்ளன.

இலங்கையில் 60 வீதமான பெண்கள் வீடுகளில் இடம்பெறும் வன்முறைகளினால் துன்பங்களை அனுபவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21