இலங்கையில் நான்கு பெண்களில் ஒரு பெண் 18வயதினை அடையும் முன்னர் பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பெண்கள் மீதான வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவர அனைவரும் பொறுப்புடன் செயற்படுவோம் என்னும் தலைப்பிலான பெண்கள் 10நாள் செயற்பாட்டு வாரத்தின் இறுதி நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை காலை கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அதிகாரசபை, பால்நிலை அடிப்படையிலான வன்முறையை குறைக்கும் செயலணி ஆகிய இணைந்து அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பு மற்றும் பெண்கள் அமைப்புகள் அனுசரணையுடன் இந்த நிகழ்வினை நடாத்தியது.
இதன் ஆரம்ப நிகழ்வில் பெண்களினால் மெழுகு திரியில் ஒளியேற்றப்பட்டு பெண்கள் மீதான வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவர அனைவரும் பொறுப்புடன் செயற்படுவோம் என்னும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இதன்போது பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பிலான விழி;ப்புணர்வு கருத்துரைகள் வழங்கப்பட்டதுடன் சூரியா பெண்கள் அமைப்பின் கலாசார குழுவின் விழிப்புணர்வு நிகழ்வுகளும் நடாத்தப்பட்டது.
இதன்போது பெண்களின் நிலைமைகள் தொடர்பில் துண்டுப்பிரசுரங்களும் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பினால் வெளியிடப்பட்டது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தவறிழைத்தவர்கள் தண்டனைகளில் இருந்து தப்பி சுதந்திரமாக நடமாடும் கலாசாரமொன்று நடைபெற்றுவருகின்றது.இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பரந்தளவில் காணப்படுதை அண்மைக்கால அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன. பெண்களுக்கு எதிரான வன்முறையை அனுபவிப்பதற்கான உயரிய ஆபத்தினைக்கொண்டுள்ளனர்.
2013ஆம் ஆண்டு அறிக்கையின்படி பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான வன்முறைகள் மற்றும் துஸ்பிரயோகங்கள் அதிகளவில் அறிக்கையிடப்பட்டுள்ளன.
இலங்கையில் 60 வீதமான பெண்கள் வீடுகளில் இடம்பெறும் வன்முறைகளினால் துன்பங்களை அனுபவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM