வெள்ளவத்தையில் கொரோனா ? வெளியான செய்தி உண்மையா ?

02 Dec, 2020 | 06:35 PM
image

வெள்ளவத்தையில் 140 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறும் தெரிவித்து வட்சப் சமூவலைத்தளத்தில் செய்தியொன்று இன்று பரவியிருந்தது.

இதனை பொது மக்களின் பாதுகாப்புக் கருதியே பொலிஸார் வெளியிட்டுள்ளதாகவும் குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இச் செய்தியில்  

வெள்ளவத்தை மயூரா வீதி மற்றும் அதனை அண்டிய தொடர்மாடிப்பகுதியில் 11 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர் எனவும், வின்சன்ட் வீதி, கோகிலா வீதி, ஸ்ரீ விஜய வீதி ஆகிய பகுதிகளில் 64 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அத்தோடு ஸ்டெபேர்ட் வீதி பகுதியில் 6 தொற்றாளர்களும் ரோஹிணி வீதியை அண்டிய பகுதியில் 4 தொற்றாளர்களும் தர்மாராம வீதியை அண்டிய பகுதியில் ஒரு தொற்றாளரும் நஸீர் தோட்டத்தில் 7 பேரும் சைலென்ஸர் தோட்டத்தில் 3 பேரும் சுவர்ண வீதியில் 3 பேருமாக மொத்தம் 140 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை கிருலப்பனை பொலிஸ் பிரிவிலும் 106 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும்  அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தொடர்பில், நாம் முற்பகல் வேளையில் பொலிஸாரிடம் வினவிய போது, 

இச் செய்தி பொலிஸாரினால் உறுதிசெய்யப்பட்டிருந்தது.

எனினும் பின்னர் சமூக வலைத்தளங்களில் குறித்த செய்தி தொடர்பில் முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் வெளிவந்தன.

இதேவேளை, மீண்டும் இது குறித்து பொலிஸாரிடம் கேட்டபோது அவர்கள் கருத்துக்கூற மறுத்துவிட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46