உத்தரபிரதேசத்தில் வீதியின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது மணல் லொறி கவீழ்ந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் எட்டுப் பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உத்தரபிரேசின் கெளசாம்பி பகுதியில் உள்ள சாலையொன்றிலேயே இந்த விபத்து நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் அருகிலுள்ள திருமண விழாவில் கலந்து கொண்டு திரும்பி வந்த உள்ளூர்வாசிகள் என்று கூறப்படுகிறது.
சம்பவ இடத்தில் ஏழு பேர் உயிரிழந்ததுடன், மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒரு பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந் நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
விபத்து குறித்த ஆரம்ப அறிக்கையின்படி லொறியின் டயர் ஒன்று வெடித்ததன் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து லொறி கவிழ்ந்தாக கூறப்படுகிறது.
எவ்வாறெனினும் இது தொடர்பான முழு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM