வரவுசெலவுத்திட்டம் தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவின் இரண்டாவது அறிக்கை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இம்முறை வரவுசெலவுத்திட்டம் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு ஏற்புடையதாக உள்ளதா என்பது இந்த அறிக்கையின் ஊடாகத் தெளிவுபடுத்தப்படும்.
குறித்த அறிக்கையின் இறுதி வரைபு குறித்து கலந்துரையாடுவதற்கு பாராளமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில் அரசாங்க நிதி பற்றிய குழு நவம்பர் 30 கூடியது.
இதில் அரசாங்க நிதி பற்றிய குழுவின் உறுப்பினர்களான இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி ஹர்ஷ த சில்வா, டிலான் பெரேரா மற்றும் இசுறு தொடங்கொட ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
கல்வி போன்று அதிக நிதி அவசியமான துறைகளில் அதிகமான முதலீடுகளை மேற்கொள்வதற்கு எதிர்கால திட்டமிடலில் வெளிநாட்டுக் கடன்களைப் பெற்றுக்கொள்ள இக்குழு இணக்கம் இதன்போது தெரிவித்தது.
இலங்கை தொடர்பில் புதிய புள்ளிவிபரங்களை இந்த அறிக்கையில் இணைத்துக்கொள்வதற்கு இலங்கை மத்திய வங்கியின் ஒத்துழைப்பைப் பெற குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ த சில்வா சுட்டிக்காட்டினார்.
இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த அனைத்து குழு உறுப்பினர்களும் வரவுசெலவுத்திட்டம் தொடர்பான அரசாங்க நிதி பற்றிய குழுவின் இரண்டாவது அறிக்கையை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு இணக்கம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM