யாழில் 4 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

Published By: Digital Desk 4

01 Dec, 2020 | 05:41 PM
image

யாழ்ப்பாணத்தில் சுமார் 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான 3 கிலோ 300 கிராம் கேரள கஞ்சா போதைப்பொருளை கடத்திச் சென்ற இருவர் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் கைது நடவடிக்கை யாழ்ப்பாணம் செம்மணி வீதியில் நேற்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கரவெட்டியைச் சேர்ந்த 29 மற்றும் 30 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 3 கிலோ 300 கிராம் கஞ்சா போதைப்பொருள், மோட்டார் சைக்கிள் மற்றும் அலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின்  வழிகாட்டலில் பிரதான பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான குழுவினரே இந்தக் கஞ்சா கடத்தலை முறியடித்தனர்.

சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர். சான்றுப்பொருள்களும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் இன்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்