தமிழ் திரை உலகின் மூத்த நடிகரான சிவக்குமாருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.
தமிழ் திரை உலகின் மூத்த நடிகர்களில் ஒருவரும், இதிகாச சொற்பொழிவாளருமான நடிகர் சிவக்குமார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்றும், அவர் சென்னையில் உள்ள தன்னுடைய வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், நடிகர் சிவக்குமார் சார்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது...
சிவகுமாருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த சோதனையில் அவருக்கு கொரோனாத் தொற்று இல்லை என்பது உறுதியானது. இருப்பினும், அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அத்துடன் வீட்டில் அவர் ஆரோக்கியமாக இருப்பதை எடுத்துக் காட்டும் வகையில் செல்ஃபி எடுத்து அதனை இணையத்தில் பதிவேற்றி இருக்கிறார்.
இதன்மூலம், நடிகர் சிவக்குமாருக்கு கொரோனாத் தொற்று இல்லை என்பது உறுதியாகியிருக்கிறது. இதனால் அவருடைய ரசிகர்களும், சூர்யா மற்றும் கார்த்தி ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM