சிவப்பு எச்சரிக்கை ! அடுத்த 3 நாட்களுக்கு !

30 Nov, 2020 | 09:25 PM
image

வங்காள விரிகுடாவின் தென்கிழக்கில் உருவான குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளதுடன் மீனவர்களை உடனடியாக கரைக்குத் திரும்புமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, காங்கேசன்துறையில் இருந்து திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கரையோரத்தில் இருந்து நாளை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்கள் மற்றும் கடற்போக்குவரத்தில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கடற்பிரதேசங்களில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்புமாறு கேட்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வங்காள விரிகுடாவின் தென்கிழக்கில் உருவான குறைந்த காற்றழுத்த மண்டலம் தாழமுக்கமாக மாறி, இன்று பிற்பகல் ஒரு மணியளவில் திருகோணமலையில் இருந்து தென்கிழக்குத் திசையில் 750 கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டிருந்தது. 

இந்த மண்டலம் அடுத்துவரும் சில மணித்தியாலங்களில் புயலாக மாறக்கூடும். இது மேற்குத் திசையில் நகர்ந்து புதன்கிழமை மாலை மட்டக்களப்புக்கும், முல்லைத்தீவிற்கும் இடையில் கிழக்கு கரையோரத்தில் தரை தட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தொகுதியின் காரணமாக, அடுத்து வரும் மூன்று நாட்கள் வடக்கு கிழக்கு கடற்பரப்பில் அடிக்கடி மழை பெய்யலாம். 

இடி முழக்கத்துடன் மழை பெய்யும் சாத்தியமும் உள்ளது. காற்றின் வேகம் சடுதியாக அதிகரித்து கடல் கொந்தளிக்கலாம். 

காங்கேசன்துறையில் இருந்து திருகோணமலை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பால் இரண்டு முதல் மூன்று மீற்றர் அலைகள் எழுந்து, கரைக்கு அப்பால் வரக்கூடும்.

இந்தத் தொகுதியின் காரணமாக, அடுத்து வரும் மூன்று நாட்கள் வடக்கு கிழக்கு கடற்பரப்பில் அடிக்கடி மழை பெய்யலாம். 

இடி முழக்கத்துடன் மழை பெய்யும் சாத்தியமும் உள்ளது. காற்றின் வேகம் சடுதியாக அதிகரித்து கடல் கொந்தளிக்கலாம். 

காங்கேசன்துறையில் இருந்து திருகோணமலை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பால் இரண்டு முதல் மூன்று மீற்றர் அலைகள் எழுந்து, கரையைத் தாண்டி வரலாம். நாட்டை சூழவுள்ள கடல் கொந்தளிப்பானதாகவும் இருக்கும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27