(நா.தனுஜா)
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கும் ஷானி அபேசேகரவிற்கு அவசியமான சிகிச்சை வசதிகள் அனைத்தையும் பெற்றுக்கொடுப்பதுடன் அவரது பாதுகாப்பை உறுதிசெய்வது அதிகாரிகளின் கடமையாகும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
அவருடைய அடிப்படை உரிமைகள் ஒருபோதும் மீறப்படக்கூடாது என்றும் முன்னாள் சபாநாயகர் வலியுறுத்தியிருக்கிறார்.
கரு ஜயசூரிய தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் இவ்வாறு கூறியுள்ளார்.
மிகச்சிறந்த புலனாய்வு அதிகாரியாக பிரபல்யம் பெற்ற ஷானி அபேசேகர, சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அவருக்கு அவசியமான சிகிச்சை வசதிகள் அனைத்தையும் பெற்றுக்கொடுப்பதுடன் அவரது பாதுகாப்பை உறுதிசெய்வது அதிகாரிகளின் கடமையாகும். அவருடைய அடிப்படை உரிமைகள் ஒருபோதும் மீறப்படக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM