'ஜனாசாக்களை எரிப்பதற்கான ஆவணத்தில் யாரும் கைச்சாத்திடவேண்டாம்': அஸாத்சாலி கோரிக்கை

Published By: J.G.Stephan

30 Nov, 2020 | 01:10 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)
பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்வதை யாரும் மறுக்கவேண்டாம். அதற்காக உரிய அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். அத்துடன் கொவிட் தொற்றுக்குள்ளாகி மரணிப்பவர்களை எரிப்பதற்கான ஆவணத்தில் முஸ்லிம்கள் யாரும் கைச்சாத்திடவேண்டாம் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.

அடுலுகம பிரதேசத்தில் மக்கள் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்வதை தவிர்க்கும் வகையில் போலி முகவரிகளை வழங்கி வருவதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்திருக்கும் விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

அட்டுலுகம பிரதேசத்தில் மக்கள் பி.சி,ஆர். பரிசோதனை மேற்கொள்வதை  தவிர்க்கும் வகையில் மறைந்து வருவதுடன் அவர்கள் பொய்யான முகவரிகளை அதிகாரிகளுக்கு வழங்குவதாக இராணுவ தளபதி தெரிவித்திருக்கின்றார். அடுலுக பிரதேசத்தில் கொரோனா நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அந்த பிரதேசத்தில் அதிகமானவர்களை எந்தவித அறிவித்தலும் இல்லாமல் பஸ்களில் ஏற்றிச்சென்றிருப்பதாக அவர்களிடமிருந்து வந்த குரல் பதிவுகளில் இருந்து அறிய கிடைத்தது. அதனால்தான் அந்த மக்கள் அச்சத்தில் இவ்வாறு பி.சிஆர். பரிசோதனையை மேற்கொள்ளாமல் மறைந்து வருகின்றனர்.

பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்வதை யாரும் மறுக்கவேண்டாம். அதற்காக உரிய அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளாமல் நாங்கள் மறைந்திருந்தால், அதனை காரணம் காட்டி முழு குடும்பத்தையும் தனிமைப்படுத்தும் நிலை இருக்கின்றது. அதனால் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளவேண்டாம் என யாரும் குரல் பதிவுகளை மேற்கொண்டு மக்களை அச்சமூட்டக்கூடாது. ஏனெனில் பி.சி.ஆர். பரிசோதனையை தவிர்கும் வகையில் யாராவது மறைந்திருந்தால், அவர்களின் வீடுகளை சீல் வைத்து, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்திருக்கின்றார்.

இதேவேளை, கொரோனா தொற்றில் மரணிக்கும் சடலங்கள் எரிக்கப்படுகின்றது. அதனை அடக்கம் செய்வதற்கும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருப்பதால், முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரிப்பதற்கு, எதிர்ப்பு தெரிவித்து சட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றோம். எமக்கு நீதி கிடைக்கும்வரை கொரோனாவில் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரிப்பதற்காக குடும்பத்தாரிடம் கையொப்பம் கேட்கும்போது அதனை மேற்கொள்ளவேண்டாம். 

கொழும்பில் நேற்று முன்தினம் 3 ஜனாசாக்களை எரிப்பதற்கு முற்பட்டபோது அந்த குடும்பத்தினர் யாரும் அதற்கு அனுமதித்து கையெழுத்திடவில்லை. அதனால் அந்த ஜனாசாக்களை அவர்கள் பிணவறையில் வைப்பதாக தெரிவித்திருக்கின்றனர். இவ்வாறு அனைவரும் செயற்படவேண்டும். அதற்காக யாரும் பணம் வழங்கவும் வேண்டாம்.

அத்துடன் ஜனாசா எரிப்பு தொடர்பான வழக்கு விசாரணை இன்று இடம்பெற இருக்கின்றது. அதனால் முஸ்லிம்கள் பொறுமையுடன் செயற்படவேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09