புறக்கோட்டை திறக்கப்பட்டாலும் மொத்த விற்பனைக்கு தடை

Published By: Vishnu

30 Nov, 2020 | 07:51 AM
image

(செ.தேன்மொழி)

கொழும்பு - புறக்கோட்டை வழமைக்கு கொண்டுவரப்பட்டாலும் மொத்த விற்பனை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் ஐந்து பொலிஸ் பிரிவுகள் வழமைக்கு கொண்டுவரப்படவுள்ளன. 

அதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் மட்டக்குளி, வெரலபட மற்றும் புறக்கோட்டை பொலிஸ் பிரிவுகளும், கம்பஹா மாவட்டத்தில் ராகம மற்றும் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவும் இன்று காலை 5 மணியுடன் வழமைக்கு திரும்பியுள்ளன.

எனினும் மட்டக்குளி, வெரலபட பொலிஸ் பிரிவுகளில் சில பிரதேசங்களும் , தொடர்மாடி குடியிருப்புக்களும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்கள் தொடர்பில் பொலிஸ் புலனாய்வு பிரிவினரும், சுகாதார பிரிவினரும் கண்காணித்து வருகின்றனர்.

புறக்கோட்டை பொலிஸ் பிரிவு வழமைக்கு கொண்டுவரப்பட்டாலும், 4 மற்றும் 5 ஆம் சந்தி பகுதிகள் திறக்கப்படமாட்டாது. இதேவேளை மெனிங் சந்தையும் திறக்கப்படமாட்டாது. இந்த பகுதியில் மொத்த விற்பனை நடவடிக்கைகள் எதுவும் நடைபெறாது. 

எனவே மெனிங் சந்தையில் தங்களது உற்பத்தி பொருட்களை விநியோகம் செய்வதற்கு எதிர்ப்பார்த்திருப்பவர் இதுவரைகாலமும் செய்ததை போன்று மாற்று வழிகளையே பயன்படுத்த வேண்டும். ஆனால் பஸ் தரிப்பிடங்களின் செயற்பாடுகள் வழமையைப் போன்றே இடம்பெறும்.

தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளும் எதிர்வரும் தினங்களில் வழமைக்கு கொண்டுவரப்படுவதற்கு வாய்ப்புள்ளது . ஆனால் இதற்காக அந்த பகுதிகளில் உள்ள மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33