இந்தோனேஷியாவில் நால்வரை படுகொலை செய்த நபர்களை தேடும் பணிகளை அந் நாட்டு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தோனேஷியாவின் சுலவேசி தீவில் ஒரு பயங்கரவாத குழுவுடன் தொடர்புடைய பத்து தீவிரவாதிகள் வெள்ளிக்கிழமை துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் தலையை துண்டித்தும் கழுத்தை அறுத்தும் நான்கு பேரை கொலை செய்துள்ளனர்.
மத்திய சுலவேசி மாகாணத்தில் உள்ள லெம்பன்டோங்கோவா கிராமத்தில் வெள்ளிக்கிழமை காலை பதுங்கியிருந்த தீவிரவாதிகள் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் தாக்குதல் நடத்தியவர்கள் பல வீடுகளை எரித்தும் உள்ளதாக கவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந் நிலையில் தாக்குதலை மேற்கொண்ட நபர்கள் எவரும் இதுவரை கைதுசெய்யப்படாத நிலையில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உலகின் மிகப்பெரிய முஸ்லிம் பெரும்பான்மை நாடான இந்தோனேசியா சமீபத்தில் இடைவிடாத போர்க்குணமிக்க தாக்குதல்களால் பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் இந்தோனேசியாவில் உள்ள கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கு எதிரான மற்றொரு தீவிரமான தாக்குதல் என்று மனித உரிமைகள் கண்காணிப்பக ஆராய்ச்சியாளர் ஆண்ட்ரியாஸ் ஹர்சனோ சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM