(ஆர்.ராம்)
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் மார்ச் மாத கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை உயிர்ப்புடன் வைத்திருப்பது பற்றி கலந்துரையாடலை இராஜதந்திர தரப்புக்களுடன் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
விசேடமாக, அடுத்த ஜெனீவா அமர்வில் இலங்கை தொடர்பான விடயத்தினை கையாளவுள்ள பிரித்தானியா, கனடா உள்ளிட்ட முக்கிய நாடுகளுடன் இவ்வாறு தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் சாதகமாக பரிசீலிப்பதாக கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கையின் பொறுப்புக்கூறலை மையப்படுத்தும் தீர்மானம் எதிர்வரும் மார்ச் மாத்துடன் நிறைவுக்கு வருகின்றனது.
இந்நிலையில் இலங்கையின் பொறுப்புக்கூறலை தொடர்ச்தும் உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்து வருகின்றது.
அதனடிகப்படையில், தற்போதைய தீர்மானத்தினை தொடர்ந்தும் நீடிப்பதா இல்லை புதிய தீர்மானமொன்றை கொண்டுவருவதா என்பது பற்றி அதனைக் கையாளவுள்ள மற்றும் அனுசரணை வழங்கவுள்ள நாடுகளுடன் தொடர்ச்சியாக கலந்துரையாடி வருகின்றோம்.
தற்போதைய பிரேரணை நீடிக்கப்படுவதென்றால் அதில் எவ்விதமான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது பற்றியும், புதியதொரு பிரேரணை கொண்டுவரப்படுவதாக இருந்தரில் அதில் உள்வாங்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடல்களின்போது இராஜதந்திர தரப்பினரும் சாதமகான சமிக்ஞைகளை வெளிப்படுத்தியுள்ளார்கள். விசேடமாக எமது நியானமான கோரிக்கைகள் தொடர்பில் அந்தந்த நாடுகளின் தலைநகரில் இவ்விடயங்களை கையாழும் தரப்புக்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
இவ்விதமான செயற்பாடுகள் எமக்கு மேலும் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது. அத்துடன் ஜெனீவா அரங்கில் இலங்கை அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை. அது பொறுப்புக்கூறலிலிருந்து ஒருபோதும் விலகவும் முடியாது. ஆகவே, அந்த விடயத்தினை உயிர்ப்புடன் வைத்திருப்பதே தற்போது எமது முக்கிய பணியாக உள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM