(நா.தனுஜா)
மாவீரர்நாள் நினைவுகூரல் நிகழ்வுகள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் கண்காணிக்கப்பட்டமை மற்றும் பலர் கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் வெளியாகியிருக்கும் செய்திகள் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளன.
அதேபோன்று உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கான தமிழர்களின் உரிமையின் மீது பிரயோகிக்கப்பட்டிருக்கும் அடக்குமுறையைக் கடுமையாகக் கண்டனம் செய்வதாக பேர்ள் அமைப்பு தெரிவித்திருக்கிறது.
இதுகுறித்து பேர்ள் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
மாவீரர்நாளாக அனுஷ்டிக்கப்பட்ட நேற்றைய தினம் ஈழத்தமிழர்களும் புலம்பெயர் தமிழர்களும் ஒன்றிணைந்து தமது விடுதலைக்கான போராட்டத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.
கடந்த 2009 ஆம் ஆண்டில் போர் முடிவிற்கு வந்ததிலிருந்து மாவீரர்நாள் மிகவும் முக்கியத்துவம் மிக்கதாக இருந்துவருகிறது.
உயிரிழந்தவர்களை இந்நாளில் நினைவுகூருவதற்கு கடந்த காலத்திலிருந்து விதிக்கப்பட்டுவரும் அடக்குமுறைகள் பொதுவானவைதான் என்றாலும், இம்முறை நினைவுகூருவதற்கான முயற்சிகள் பல்வேறு சவால்களுக்கு உட்பட்டிருக்கின்றன.
மாவீரர்நாள் நினைவுகூரல் நிகழ்வுகள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் கண்காணிக்கப்பட்டமை மற்றும் பலர் கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் வெளியாகியிருக்கும் செய்திகள் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளன.
அதேபோன்று உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கான தமிழர்களின் உரிமையின் மீது பிரயோகிக்கப்பட்டிருக்கும் அடக்குமுறையைக் கடுமையாகக் கண்டனம் செய்கின்றோம்.
மிகவும் வலுவாக்கப்பட்டிருக்கும் அடக்குமுறைகள், சர்வாதிகாரப்போக்கிலான ராஜபக்ஷ அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM